MOST RECENT

சேமியா பிரியாணி

தேவையானவை:



பட்டை                                                         -    2

லவங்கம்                                                     -   2

பிரிஞ்சி இலை                                          -   2

பச்சை மிளகாய்                                       - 4

தக்காளி                                                       -   6

பெரிய வெங்காயம்                                -   6

சேமியா                                                       -    ஒரு கிலோ

புதினா                                                          -   ஒரு கட்டு

கொத்துமல்லி                                          -   ஒரு கட்டு

இஞ்சி, பூண்டு அரைத்தது                   -  100 கிராம்

தயிர்                                                             -  ஒரு கப்

சோம்பு                                                        -   ஒரு தேக்கரண்டி

மிளகாய்த்தூள்                                        -  3 தேக்கரண்டி

தனியா தூள்                                              -   4 தேக்கரண்டி

உப்பு                                                             -   2 தேக்கரண்டி

எண்ணை                                                   -  2 குழிக்கரண்டி


காய்கறிகள் (விருப்பத்திற்கேற்ப கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி போன்றவை)  ஒரு கிலோ


செய்முறை:


* சேமியாவை சிறிது எண்ணை விட்டு வறுத்துக் கொள்ளுங்கள்.


* கடாயில் எண்ணை ஊற்றி, சூடேறிய பின் எல்லாப் பொருட்களையும் எடுத்து ஒவ்வொன்றாக வதக்குங்கள்.


* தயிர் சேர்த்து சேமியாவை கிளறுங்கள்.


* ஒரு டம்ளர் சேமியாவிற்கு ஒரு டம்ளர் வெந்நீர் என்ற விகிதத்தில் கலந்து நன்றாக கிளறுங்கள்.


(மறந்தும் கூட குளிர்ந்த நீரை ஊற்றி விடாதீர்கள்)  இப்போது சேமியா பிரியாணி தயார்.


                                                                       ******

11:45 PM | Posted in , , , , , , , , | Read More »

‘பென்’ பிறந்த கதை

'எழுதுகோல்' என்று தூய தமிழில் எத்தனை பேர் சொல்கிறோம். நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பதிவுக் கருவி, பேனா. அது தோன்றிய விதம் தெரியுமா?
இன்று நாம், பயன்படுத்துவதற்கு எளிதான பேனாக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை. பேனாவுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்பது ஆச்சரியமான விஷயம்.

லத்தீன்மொழியின் ‘பென்னாஎன்றால் ‘பறவையின் இறகுஎன்று பொருள். பென்னாஎன்பதே ஆங்கிலத்தில் பென்’ என்றும், தமிழில் பேனாஎன்று மாறியது.
5ம் நூற்றாண்டில் ‘இறகுப் பேனாவழக்கத்துக்கு வந்தது. அது 18ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1780ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார்.
1809ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார். 
ஜான் ஹாக்கின்ஸ் என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு நிப்’ செய்தார். நிப்ன் முனையில் இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882ல் வந்தது. அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு ‘நிப்’பை கண்டுபிடித்தார்.
1859ல் முதல்முறையாக ‘ஊற்றுப் பேனா’ (‘பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது. 1883ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.

அனைத்திலும் தமிழர்கள் நாம் முன்னோடி என்பதில் சந்தேகம் இல்லை. நம்முடைய இலக்கியங்கள், புராணங்களில் இருந்து பல தகவல்கள் மேலை நாட்டு அறிஞர்களால் எடுக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டு உள்ளது. 

உதாரணம், நமது ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திக் கொண்டு செல்ல புஷ்பக விமானத்தை பயன்படுத்தினான். இந்த தகவல் தான் தற்போதைய விமானத்திற்கு முன்னோடி என்பது எனது தாழ்மையான கருத்து. 

அதைப்போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே குத்தாணியை பயன்படுத்தி பேனாவிற்கு அடிகோல் வகுத்தது தமிழர்களாகிய நாம் தான் என்பதில் பெருமையே.

5:44 AM | Posted in , , , , , , , | Read More »

நாட்டுக் காய்கறி பிரியாணி

தேவையானவை:


கத்தரிக்காய், அவரைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், உருளை போன்ற காய்கறிகள் (எல்லாம் சேர்த்து)  ஒரு கிலோ


பட்டை                                                                          -  2

லவங்கம்                                                                     -  2

பிரிஞ்சி இலை                                                           -  2

பச்சை மிளகாய்                                                        -  8

 பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசி                 -  ஒரு கிலோ

வெங்காயம்                                                                -  400 கிராம்

தக்காளி                                                                        -  400 கிராம்

இஞ்சி, பூண்டு (அரைத்தது)                                  -   100 கிராம்

புதினா                                                                           -  ஒரு கட்டு

கொத்துமல்லி                                                           -  ஒரு கட்டு

தயிர்                                                                              -  ஒரு கப்

தனியா தூள்                                                               -  2 குழிக்கரண்டி


செய்முறை:


* காய்கறிகள், தக்காளி, புதினா, கொத்துமல்லி போன்றவற்றை நறுக்குங்கள்.


* குக்கரில் எண்ணை விட்டு பட்டை, லவங்கம் இலை தாளித்து புதினா, மல்லி இலை, இஞ்சி, பூண்டு அரைத்ததையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.


* அதிலேயே தக்காளி, வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசனை போக நன்றாக வதக்குங்கள்.


* அத்துடன் பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறுங்கள்.


* அதன் பின்பு, அரிசி, மல்லித்தூள் சேர்த்துக் கிளறி விடுங்கள்.


* இப்போது தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.


* குக்கரில் இருந்து 3 விசில் சத்தம் வந்ததும் அடுப்பிலேயே 5 நிமிடங்கள் வைத்து இருந்து இறக்கி விடுங்கள்.  அவ்வளவு தான்...நாட்டுக் காய்கறி பிரியாணி ரெடி.


                                                                           *****


                                                  

7:59 PM | Posted in , , , , , , , , | Read More »

ஆலயங்கள் பற்றிய அபூர்வ தகவல்கள்







1. தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் நடைபெறும் பள்ளியறை தரிசன விழா கேரளத்தில் கிடையாது. விதிவிலக்காக திருவஞ்சைக்களம் ஆலயத்தில் மட்டும் அந்த வழக்கம் உண்டு. இரவு பூஜைக்குப் பிறகு சுவாமி அம்பாளை பல்லக்கில் அமர்த்தி வேத மந்திர வாத்திய கோஷத்துடன் அழைத்து பள்ளியறையில் சேர்ப்பார்கள்.





2. எல்லாக் கோவில்களிலும் பூஜை நைவேத்யம் எல்லாம் முதலில் சுவாமிக்கு செய்த பிறகுதான் அம்பாளுக்கு செய்வார்கள். விதிவிலக்காக மதுரையில் மட்டும் மீனாட்சிக்கு செய்த பிறகுதான் சுவாமிக்கு.






3. திருமால் கோவில்கள் அனைத்திலும் சயனக் கோலத்தில் உள்ள பெருமாள் நாபியிலிருந்து தாமரை தோன்றும். அதில் பிரம்மா அமர்ந்திருப்பார். ஆனால் திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமான் கோவிலில் சயனக் கோலத்தில் உள்ள பெருமாள் நாபியிலிருந்து தாமரைப்பூ உருவாவதில்லை என்பது தனித்தன்மை.





4. பொதுவாக பெரிய சிவாலயங்களில் மூலவராக சிவபெருமானும், பரிவார மூர்த்திகளாக விநாயகர், மற்றவர்கள் திகழ்வார்கள். சிவபெருமானுக்கே பிரம்மோற்சவம் என்னும் பெருவிழா நடைபெறுவது வழக்கம். விதிவிலக்காக திருவலஞ்சுழி திருக்கோவிலில் (பாடல் பெற்ற தலம்) விநாயகருக்குத்தான் பத்து நாள்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.





5. சிவாலயங்களில் கருவறைக்கு மேல் உள்ளது விமானம் என்றும் திருவாசலில் உள்ளது கோபுரம் என்றும் வழங்கப்படும். பொதுவாக கோபுரம் மிகப் பெரியதாக உயரமாக இருக்கும். சான்றாக திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் கோபுரங்கள். விதிவிலக்காக தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோவில் விமானம் உயரமாக உள்ளது.





6. எல்லா சிவாலயங்களிலும் தேர்த்திருவிழாவில் சோமாஸ்கந்த மூர்த்திதான் உலா வருவார். விதிவிலக்காக சிதம்பரம் திருக்கோவிலில் ஸ்ரீ நடராஜாவும் ஆலங்குடி திருக்கோவிலில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியும் உலா வருவார்கள்.





7. ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவில்களில் மூலவராக யோக நரசிம்மர் தான் இருப்பார். விதிவிலக்காக பாண்டிச்சேரி, விழுப்புரம் பாதையில் உள்ள சிங்கிரி கோவில் என்னும் தலத்தில் உக்கிர நரசிம்மர் மூலவராக உள்ளார். அச்சத்திற்கு பதில் அமைதி தவழ்கிறது. உக்கிர நரசிம்மரை மூலவராக கொண்ட திருக்கோவில் இது ஒன்றுதான்.





8. தமிழகத்தில் எல்லா சிவாலயங்களிலும் நவக்கிரக சந்நிதி உண்டு. விதிவிலக்காக பிரசித்தி பெற்ற திருக்கோவிலான திருக்கடவூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் நவக்கிரக சந்நிதி கிடையாது.





9. ஆகமப்படி அர்த்தநாரீஸ்வரர் நின்ற நிலையில் தான் இருப்பார். விதிவிலக்காக திருக்கண்டியூரில் இரண்டாவது திருச்சுற்றில் உட்கார்ந்த நிலையில் உட்குடி ஆசனத்தில் உருவாக்கப்பட்டுள்ளார்.





10. பொதுவாக தினசரி திருமஞ்சனம் திருமால் திருக்கோவில்களில் மூலவருக்குக் கிடையாது. விதிவிலக்காக நெல்லை மாவட்ட நவதிருப்பதிகளில் ஒன்றான ஸ்ரீ வைகுண்ட ஸ்ரீ கண்ணபிரானுக்கு தினசரி முதலில் பாலாபிஷேகம் நடைபெறும். பின் மந்திர பூஷ்பங்களுடன் நவகலசாபிஷேகம் நடைபெறும்.





11. பொதுவாக தாழம்பூ சிவாலயங்களில் பயன்படுத்தக்கூடாது. விதிவிலக்காக உத்தர கோசமங்கையில் ஸ்ரீமங்களேஸ்வரருக்கு தாழம்பூ உகந்தது. தாழம்பூவால் பூஜிக்கப்படக்கூடிய ஒரே சிவத்தலம் இதுவே.






12. வட இந்தியாவில் எங்கும் தேர்த்திருவிழா நடைபெறுவது கிடையாது. விதிவிலக்காக பூரிஜகநாதர் ஆலயத்தில் மட்டும் தான் தேர் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.





13. திருக்கோவில்களில் நடைபெறும் பெருந்திருவிழாவை பிரம்மன் நடத்துகிறான் எனும் பாங்கில் பிரம்மோற்சவம் என்பார்கள்.





14. திருக்கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவம் எனும் பெருந்திருவிழா பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும். ஆனால் மார்கழி மாதத்தில் இரண்டு திருத்தலங்களில் தான் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஒன்று வைணவர்கள் கோவில் எனப்படும் ஸ்ரீரங்கம், மற்றது சைவர்கள் கோவில் எனப்படும் சிதம்பரம்.





15. எல்லா திருமால் திருக்கோவில்களிலும் சந்நிதிக்கு எதிரே கருடாழ்வார் சந்நிதி இருக்கும். ஆனால் விதிவிலக்காக திருவனந்தபுரம் ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கருடாழ்வார் சந்நிதி இல்லை.





16. எல்லா சிவாலயங்களிலும் முதல் பூஜை விநாயகருக்குத்தான். ஆனால் திருச்செங்காட்டங்குடியில் கணபதீ சன்னதியில் சிவபெருமானுக்கு பூஜை முடிந்த பிறகே விநாயகருக்கு பூஜை. விநாயகர் தன் தந்தாயாகிய சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் என்ற ஐதீகத்தில்.





17. எல்லா சிவாலயங்களிலும் ஈசானிய மூலையில் நவக்கிரகம் இருக்கும். விதிவிலக்காக விழுப்புரம், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள வாலிகண்டபுரத்தில் உள்ள சிவன் கோவிலில் நவக்கிரகங்கள் அக்னி மூலையில் உள்ளன.








18. பொதுவாக எந்த ஊரிலும் விநாயகர் திருக்கோவிலில் பள்ளியறை கிடையாது. விதிவிலக்காக புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளி அறை உண்டு.





19. எல்லா திருக்கோவில்களிலும் ஐந்து கரங்களுடன் காட்சி தருவார் விநாயகப்பெருமான். ஆனால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரும், கர்நாடகா கோகர்ணம் திருத்தலத்தில் உள்ள விநாயகரும் இரண்டு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றனர்.





20. திருவண்ணாமலை திருக்கோவிலில் அம்மன் சந்நிதிக்கு எதிரில் ஆடிப்பூரத்தன்று தீமிதிக்கும் வழக்கம் உண்டு. வேறு எந்த சிவாலயத்திலும் இந்த வழக்கம் இல்லை.







21. எல்லா திருத்தலங்களிலும் இராஜ கோபுரத்தின் முன் வலப்புரம் விநாயகரும் இடப்புரம் முருகனும் இருப்பார்கள். ஆனால் உத்தர கோசமங்கை தலத்தில் வலப்புரம் முருகனும் இடப்புரம் விநாயகரும் கோவில் கொண்டுள்ளார்கள்.





22. பெண்களின் நெற்றி வகிடு, மார்பு போன்றவற்றில் மகாலட்சுமி வாசம் பண்ணுவதால் பெண்களின் எல்லா அங்கங்களும் சாமான்யமாக பூமியில் படும்படியாக அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுவதை ஆசார முறை தடுக்கிறது. ஆனால் அங்கப் பிரதட்சணம் எனும் வழிபாட்டு முறையில் அங்கங்கள் பூமியில் படலாம் என்பது விதிவிலக்கு.





23. வீடுகளில் தினசரி பால் காய்ச்சும் போது பொங்கி வழிவதை அசுபமாகக் கருதுவர். சொல்லவும் கேட்கவும் கூசுவர். ஆனால் பொங்கல் திருநாள் மட்டும் பால் பொங்குவதை விரும்புவர். பால் பொங்கிற்றா என்றே கேட்டு மகிழ்வர்.





24. பொதுவாக திருக்கோவில்களில் பலிபீடமும் கொடிமரமும் ஆலயத்திற்கு உள்ளே இருக்கும். ஆனால் காஞ்சிக்கு அருகில் உள்ள திருப்புட்குழி தலத்தில் கொடி மரமும் பலிபீடமும் ஆலயத்திற்கு வெளியே அமைந்துள்ளன.





25. எல்லா ஊர்க்கோவில்களிலும் தேர்களும் ரதங்களும் நிரந்தரமாக இருக்கும். விதிவிலக்காக பூரி ஜகந்நாதர் திருக்கோவில் ரதம் ஒவ்வொர் ஆண்டும் புதிதாகச் செய்யப்படும்.





26. எல்லாக் கோவில்களிலும் சந்நிதித் தெருவில் யாராவது இறந்தால் திருக்கோவில் மூடிவிடுவது வழக்கம். ஆனால் ஸ்ரீ வாஞ்சியத்தில் கோவிலில் யமனே உள்ளதால் மரணத்தீட்டு கிடையாது.



----------------------------

5:29 AM | Posted in , , , , , , , | Read More »

Simplex Design


Simplex Design

sdsdsdssfsfdsfdsf

6:04 AM | Posted in | Read More »

Blog Archive

Recently Commented

Recently Added